𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profileg
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝

@actor_shirish

A professional actor in the South Indian film industry.

ID:619278965

linkhttps://en.m.wikipedia.org/wiki/Shirish_Saravanan calendar_today26-06-2012 17:47:14

6,0K Tweets

19,9K Followers

97 Following

𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

விளக்கம்:
கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

விளக்கம்:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1270:
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

விளக்கம்:
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1269:

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

விளக்கம்:
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1268:
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

விளக்கம்:
தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1267:
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

விளக்கம்:
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே…

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1266:
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

விளக்கம்:
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1265:
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

விளக்கம்:
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1264:
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

விளக்கம்:
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1263:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

விளக்கம்:
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1262:
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
சிவயோகி சிவக்குமார்

விளக்கம்:
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என்…

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1261:
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

விளக்கம்:
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.…

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1260:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

விளக்கம்:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1259:
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

விளக்கம்:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1258:
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

விளக்கம்:
நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

விளக்கம்:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1256:
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

விளக்கம்:
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.

account_circle
𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝(@actor_shirish) 's Twitter Profile Photo

குறள் 1255:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

விளக்கம்:
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

account_circle